July 15, 2010

How to write novels?

Kadugu's hilarious take on novel writing for dummies. I particularly liked the conversion of a present day happening into a historic piece of writing.

முதலில் எழுதப்படும் கதை:

"தலப்பாகட்டில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு ஸ்கூட்டரில் ஏறிச் சென்று கொண்டிருந்த மணியின் பார்வை சட்டென்று எதிர்த் திசையில் சென்று கொண்டிருந்த மாலினியின் மேல் விழுந்தது. அவள் ஒரு பெரிய கட்டடத்தில் நுழைந்தாள். அவள் அணிந்திருந்த `சைனா' புடவை மாலை வெயிலில் பளபளத்தது.

இதை சரித்திரக் கதையாக மாற்றுவது எப்படி?

"பால் சோறும் பலாக்கனியும் உண்டுவிட்டு புரவியில் ஏறிப் பாதை வழியே மெல்ல வந்து கொண்டிருந்த இளவரசன் மார்த்தாண்ட மணிவர்மனின் பார்வை ஒரு கணம் எதிர்ச்சாரியில் மலர்ப் பூங்காவின் பின்புறம் சென்று கொண்டிருந்த ராஜ பாதையின் மேல் சென்றது. அங்கே அழகு மயில் என ஒயிலாகச் சென்றுக் கொண்டிருந்தாள் எழில் மங்கை மாளவிகா. அவள் பூப் போன்ற பாதங்களால் நடக்காமல் அன்னமென மென்காற்றில் மிதந்து செல்வது போல் சென்றாள். அருகே இருந்த மாட மாளிகையின் வேலைப்பாடுகள் அமைந்த மணிக் கதவுகளைத் திறந்து சென்றாள். அவள் அணிந்திருந்த முத்து மாலையும், காதில் நடனமாகிக் கொண்டிருந்த குண்டலமும், சங்குக் கழுத்தை தழுவிய நவரத்னாபரணமும், -இவைகளும் சாவகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மென்பட்டாலான மேலங்கியும் அந்தி வெயிலில் தகதகவென்று பளபளத்து ஒரே தேஜோமயமாகக் காட்சி அளித்தது...

1 comment:

Ani said...

excellent... nammalum ezhuthalar agalama?